லண்டனில் அடுத்தடுத்து 2 சிறுவர்கள் குத்திக் கொலை!
லண்டனில் நேற்று வெவ்வேறு இடங்களில், 7 மணி நேர இடைவெளியில் 2 சிறுவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
லண்டனின் தென்-கிழக்கு பகுதியில் உள்ள Woolwich New-ல், திங்கட்கிழமை மாலை 5.20 மணியளவில், 15 வயது சிறுவன் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் கும்பலால் தாக்கப்பட்டபோது, கையில் வைத்திருந்த குடையை வைத்து சமாளிக்க முயன்றுள்ளார். அனால் குறைந்தது 2 கத்திகளைக் கொண்டு பல முறை குத்தப்பட்டான்.
பொதுமக்கள் பலரும் நிறைந்திருந்த பிஸியான சாலையில் இந்த கொலை நடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் அவசர அம்புலன்ஸ் சேவை உடனடியாக வந்தனர்.
சிறுவனுக்கு CPR உள்ளிட்ட முதலுதவிகள் கொடுக்கப்பட்ட பிறகும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சாலையின் ஓரமாக தார்பாலின் வைத்து மறைக்கப்பட்டு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
இந்த சம்பவம் நடந்த அடுத்த 7 மணி நேரத்திற்குள், மற்றோரு சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான்.
தெற்கு லண்டனில் உள்ள Lambeth, ஓவல் பிளேஸில், 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக நேற்று (திங்கட்கிழமை) இரவு 11.45 மணியளவில் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
லண்டன் ஆம்புலன்ஸ் சேவையுடன் வந்த அதிகாரிகள் சிறுவனை சோதித்ததில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்ததாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, தொடர்ந்து விசாரணை தடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.