த்ரில்லிங்காக முடிந்த யூரோ கால்பந்து! தங்க ஷு யாருக்கு கொடுக்கப்பட்டது தெரியுமா?
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்ற முடிந்த நிலையில், அதிக கோல் அடித்த வீரருக்கு தங்க ஷு கொடுக்கப்பட்டது.
லண்டனில் இன்று நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை பெனால்ட்டி சூட்டில் இத்தாலி 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 53 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது யூரோ கோப்பையை இத்தாலி வென்றுள்ளது. இந்நிலையில், இந்த யூரோ கால்பந்து தொடரில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கு தங்க ஷு கொடுக்கப்படும்,
அதன் படி இந்த முறை போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோவுக்கு, கொடுக்கப்பட்டுள்ளது. இவர் இந்த கால்பந்து தொடரில் ஐந்து கோல்கள் அடித்து அசத்தினார்.
இருப்பினும் இவர் தலைமையிலான போர்ச்சுக்கல் அணி, பெல்ஜியம் அணிக்கெதிரான ரவுண்ட் 16-ல் தோல்வியடைந்து வெளியேறியது.
இவரைத் தொடர்ந்து இதற்கு அடுத்த படியாக செக் குடியரசைச் சேர்ந்த Patrick Schick ஐந்து கோல்களுடன், இரண்டாவது இடத்திலும், பிரான்சைச் சேர்ந்த Karim Benzema நான்கு கோல்கலுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.