பிரான்ஸில் விஸ்வரூபமெடுக்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்.. பாரிஸில் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள்! ஏதற்காக?
பிரான்ஸில் கொரோனா தொர்பாக அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராடத்தில் குதித்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா கடந்த 1 ஆண்டிற்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 3வது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
அதேசமயம், பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சுகாதார சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த வாரத்திலிருந்து தொடங்கி, அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள், சினிமாக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு வருகை தரும் நபர்கள் ஹெல்த் பாஸ் வைத்திருக்க வேண்டும்.
அடுத்த வாரம், புதிய கட்டுப்பாடுகள் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக மையங்களுக்கும், விமானங்கள் மற்றும் நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்வதற்கும் பொருந்தும்.
Manifestation massive à #Paris contre le pass sanitaire. (@CharliB97783485) #AntiPassSanitaire #manif24juillet#manifs24juilletpic.twitter.com/3QUMc74aVJ
— Anonyme Citoyen (@AnonymeCitoyen) July 24, 2021
இந்நிலையில், ஹெல்த் பாஸ் உட்பட பிரான்ஸ் அரசின் புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பாரிஸில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.