பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை: சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் பெற்ற மகளுக்கு ஆபாச படங்கள் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை எம்.பி நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் இளங்கோவன் வீட்டிற்கு தினமும் குடித்துவிட்டு பெற்ற மகளிடம் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் போதையில் தலை கால் புரியாமல் மனைவி மற்றும் மகள்களை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்த சித்ரவதையை பொறுக்கமுடியாமல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் இளங்கோவனின் மனைவி ஆறு மாதத்திற்கு முன்பு புகார் அளித்துள்ளார்.
ஆனால் அவர் கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மகளிர் சங்கங்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து இளங்கோவனை பொலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.