எங்கள் நாட்டில் அனைவரும் இப்படிப்பட்டவர்கள் அல்ல! யூரோ கால்பந்து போட்டியில் கதறி அழுத சிறுமியை தேடி வரும் அதிர்ஷ்டம்
யூரோ கால்பந்து போட்டியின் போது, ஜேரம்னி அணி தோல்வியால் கதறி அழுத சிறுமியை பிரித்தானியர் ஒருவர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,
ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான யூரோ கால்பந்து தொடர், வெகு விமர்சியாக ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. அதன் படி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து-ஜேர்மனி அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து 2-0 என்று வெற்றி பெற்றது.
இதனால், ஜேர்மனி இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இதை தாங்க முடியாமல், இந்த போட்டியை காண வந்த ஜேர்மனி சிறுமி மைதானத்தில் கதறி அழுதார். அப்போது அந்த வீடியோ அங்கிருக்கும் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.
அதன் பின் அந்த சிறுமியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இதைக் கண்ட பிரித்தானியா ரசிகர்கள் பலர் கேலி செய்யும் விதமாக குறிப்பிட்டு வந்தனர்.
இதனால் முன்னாள் கால்பந்து வீரர்களான Stan Collymore மற்றும் Gary Lineker இதை கண்டித்தனர். இந்நிலையில், பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த Joel Hughes என்பவர் கண்டுள்ளார்.
உடனே சிறுமிக்கு ஆதரவாக இருக்கும் வகையில், JustGiving page for the youngster என்ற பக்கத்தை உருவாக்கி சிறுமிக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
ஏனெனில், சிறுமியை பிரித்தானியர்கள் பலர் கிண்டல் செய்து வந்த நிலையில், அவர் இங்கிருக்கும் அனைவரும் இது போன்று கொடூரமானவர்கள் அல்ல, நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.
அதன் படி இதற்காக அவர் 500 பவுண்ட்டை வைத்துள்ளார். ஆனால், இப்போது அது 10 ஆயிரம் பவுண்ட்டை தாண்டி சென்று கொண்டிருக்கிறதாம் இதையடுத்து, அவர் தற்போது அந்த சிறுமியை தேடி வருகிறார்.
ஜேர்மனியில் இருக்கும் சில ஊடகங்களிடமும் பேசி வருகிறார். ஆனால், சிறுமியைப் பற்றி தற்போதைக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லையாம், இது குறித்து அவர் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, நான் இதுவரை சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை.
இருப்பினும் ஜேர்மன் ஊடகவியலாளர்கள் சிலரிடம் தொடர்பில் இருக்கிறேன். நான் அந்த குடும்பத்தை தொடர்பு கொண்டால், இந்த நிதியை கொடுத்துவிடுவேன், அப்படி தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், இந்த பணம் தேவைப்படும் பொருத்தமான தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் இணையத்தில் அந்த சிறுமி கேலி, கிண்டலுக்குள்ளானதை என்னால் பார்க்க முடியவில்லை, இதனால் அவரது முகத்தில் புன்னகையை பார்க்க விரும்பினேன்.
இந்த சிறுமியை விட, இதே போன்று பலரும் பாதிக்கபட்டுள்ளனர். அது உண்மை தான், ஆனால் இது ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையாக செய்கிறேன்.
இதைக் கொடுத்தால், சிறுமியின் பெற்றோர் இதை ஒரு நல்ல விருந்திற்கு செல்விடுவார்கள். அப்போது சிறுமியின் முகத்தில் ஒரு புன்னகையைப் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி பிரித்தானியாவில் அனைவரும் கொடூரமானவர்கள் அல்ல, என்னைப் போல் அக்கறை கொள்ளும் பலரும் உள்ளதை நிரூபிக்கவும் இது உதவும் என்று கூறினார்.