ஏலத்தில் இவரை வாங்க சென்னை அணி பெரு முயற்சி எடுக்கும்! CSK CEO காசி விஸ்வநாதன் உறுதி
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி யாரை வாங்க பெரு முயற்சி எடுக்கும் என்பது குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
2022 ஐபிஎல் சீசனுக்காக தோனி, ஜடேஜா, கெய்க்வாட் மற்றும் மொயின் அலியை சென்னை அணி தக்க வைத்துள்ளது.
டுபிளசிஸை சென்னை அணி கழட்டிவிட்டது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டுபிளசிஸ், 2021 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 16 போட்டிகளில் 633 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில்தக்க வைக்க முடியாத வீரர்களை , ஏலத்தில் வாங்க சென்னை அணி முயற்சி செய்யும் என காசி விஸ்வநாதன் உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக, இரண்டு சீசன்களில் சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற டுபிளசிஸ் முக்கிய காரணமாக இருந்தார். ஏலத்தில் அவரை வாங்க சென்னை அணி பெரு முயற்சி செய்யும்.
ஆனால், எங்கள் கையில் ஏதுவும் இல்லை என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எந்த அணிக்கு சென்றாலும் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். 2022 ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட நாங்கள் காத்திருக்கிறோம் என விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.