CSK-வா? மும்பையா? IPL-ல் RCB-தவிர எந்த அணிக்காக விளையாட ஆசை? சஹால் அளித்த பதில்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சஹால் ஐபிஎல் தொடரில், தான் எந்த அணியில் விளையாட ஆசைப்படுகிறேன் என்பது குறித்து கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் வீட்டிலே பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக சமூகவலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதி அளித்து வருகின்றனர்,
ஆன்லைனிலே ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுபவரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளருமான யுவேந்திர சஹாலிடம், சமீபத்தில் பிரபல ஆங்கில ஸ்போர்ட்ஸ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தது.
அப்போது, அவரிடம் நீங்கள் பெங்களுரூ அணியை தவிர்த்து வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது சென்னை அணியா? மும்பையா? ஹைதராபாத்தா? அல்லது வேறு ஏதேனும் அணியா என்று கேட்கப்பட்டது.
அதற்கு சஹால் கொஞ்சம் கூட யோசிக்காமல் சென்னை அணி தான் என்று பதிலளித்தார். இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில், அதாவது 2011-ஆம் ஆண்டு யுவேந்திர சஹால் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்டார்.
அதன் பின் 2014-ஆம் ஆண்டு பெங்களூரு அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட அவர், தற்போது வரை பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.