இறுதி சண்டைக்கு தயாராகிவிட்டோம்: கடைசி போட்டியில் விளையாடும் CSKவின் பதிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது கடைசி ஐபிஎல் 2025 லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கடைசி போட்டி
அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது ஐபிஎல் 2025 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவே வெளியேறிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது கடைசி போட்டியாகும். எனவே ஆறுதல் வெற்றியை அந்த அணி பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதே சமயம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி வலுவான நிலையில் இருப்பதால், இந்த போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடியெடுத்து வைக்கிறோம்
இப்போட்டிக்கு தயாராகியுள்ள சென்னை அணி வீரர்கள் அகமதாபாத் மைதானத்திற்கு புறப்படும் புகைப்படங்களை CSK எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அத்துடன் "இறுதி சண்டையை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம்" எனவும் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |