எனக்கு இந்த 4 வீரர்களை CSK அணி தக்க வைக்கனும்னு விருப்பம்: பத்ரிநாத்
2022 ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கும் 4 வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் பத்ரிநாத் கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் புதிதாக அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அணிகளும் மூன்று இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தக்க வைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரசிகர்கள் பலம் அதிகம் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிப்பிட்ட 4 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என தனது விருப்பத்தை முன்னாள் வீர்ர் பத்ரிநாத் வெளியிட்டுள்ளார்.
அதன்படி மகேந்திர சிங் டோனியை முதல் வீரராக அவர் தேர்வு செய்துள்ளார்.
மேலும் ரவீந்திர ஜடேஜா, ருத்துராஜ், டூ ப்ளீஸிஸ் ஆகிய மூன்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
My Four Retention Options for #CSK
— S.Badrinath (@s_badrinath) November 28, 2021
- MS Dhoni
- Ravindra Jadeja
- Ruturaj
- Faf Du Plessis
What is yours ? #CricItWithBadri