ஐபிஎல் 2022! மும்பை அணியின் முக்கிய வீரர்களுக்கு ஸ்கெட்ச் போடும் CSK அணி... செம டுவிஸ்ட் இது
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஐபிஎல் தொடரில் புதிய இரு அணிகளுடன் சேர்த்து மொத்தம் 10 அணிகள்வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளது. இந்த நிலையில் விரைவில் ஐபிஎல் நடைபெறவுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி தூக்கும் என எதிர்பார்க்கப்படும் வீரர்களின் பெயர்கள் கசிந்துள்ளது.
இஷான் கிஷன்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இஷான் கிரஷனை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே திட்டம் போட்டுள்ளது. ஏனெனில் சிஎஸ்கே ஓபனர் ஃபாஃப் டூ பிளஸி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
அவர் அணியில் தக்கவைக்கப்படவில்லை, இவர் இடத்தை பூர்த்திசெய்ய, நீண்ட காலம் விளையாடும் அளவுக்கு ஓபனர் தேவை. இஷான் கிஷன் அந்த இடத்திற்கு சரியான தேர்வாக இருப்பார் என நம்பப்படுகிறது.
ராகுல் சஹார்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்தை சுழற்றிய ராகுல் சஹார் தக்கவைக்கப்படவில்லை. சென்னை மைதானம் சுழலுக்கு சாதகமானதாக இருக்கிறது. இதனால், ராகுல் சாஹரை கொண்டுவந்தால், மிடில் ஓவர்களில் சிஎஸ்கேவுக்கு பிரச்சினைகள் குறையும்.
ஷர்தூல் தாகூர்
கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம், விக்கெட்டை எடுத்துக் கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஷர்தூல் தாகூர் தக்கவைக்கப்படவில்லை. இவரால் பேட்டிங்கிலும் அதிரடி காட்ட முடியும். இதனால், சிஎஸ்கே இவரை மீண்டும் அணிக்குள் கொண்டுவரலாம்.