CSKவிற்கு வரும் சஞ்சு சாம்சன் - இந்த 2 வீரர்களை விட்டுக்கொடுக்கும் சென்னை அணி
சஞ்சு சாம்சனை வாங்கி விட்டு, RR அணிக்கு 2 வீரர்களை CSK வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
CSKவில் சஞ்சு சாம்சன்?
2025 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவராக இருந்தவர் சஞ்சு சாம்சன்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் அணித்தலைவராக ரியான் பராக்கை நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சஞ்சு சாம்சன் CSK அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளும்சூசகமாக அதனை வெளிப்படுத்தியது.
தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் MLC தொடரில், CSK நிர்வாகத்தின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
அங்கு சென்றுள்ள சஞ்சு சாம்சன், CSK அணி நிர்வாகத்துடன் நெருக்கமாக அமர்ந்து பேசி வரும் நிலையில், சஞ்சு சாம்சன் கிட்டத்தட்ட CSK அணிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 வீரர்களை இழக்கும் CSK
அதற்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரையும், ராஜஸ்தான் அணிக்கு சென்னை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தபரிமாற்றம் நடந்தால், ராஜஸ்தான் அணி ரூ.21.75 கோடி மதிப்புள்ள வீரர்களைப் பெறும், அதே நேரத்தில் சாம்சனின் மதிப்பு ரூ.18 கோடி. ராஜஸ்தான் அணி மீதமுள்ள ரூ.3.75 கோடியை CSK அணிக்கு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், சென்னை அணி இதுவரை எந்த வீரரையும் பரிமாற்றம் செய்ததில்லை என்பதால், இந்த பரிமாற்றம் உறுதியாக நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |