டோனியின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட வருண்! ஆட்டத்தை மாற்றிய ஜடேஜா: கடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன் படி முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடின
இதில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாத்தி 45 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 37 ஓட்டங்களும் எடுத்தனர்.
அதன் பின் ஆடி வரும், சென்னை அணிக்கு துவக்க வீரர்களான ருத்ராஜ் கெய்க் வாட் மற்றும் பாப் டூ பிளிசிஸி சிறப்பான துவக்கத்தை கொடுத்ததால், முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 74 ஓட்டங்கள் எடுத்தது. இதில் ருத்ராஜ் கெய்க்வாட் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து டூ பிளிசிஸ் 43 ஓட்டங்களிலும் அடுத்து வந்த வீரர்களான மொயின் அலி(32), அம்பத்தி ராயுடு(10), சுரேஷ் ரெய்னா(11) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோனியை கொல்கத்தா அணி வீரர் வருண் சக்ரவர்த்தி போல்டாக்கி வெளியேற்ற, ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது.
கடைசி இரண்டு ஓவரில் 26 ஓட்டங்கள் என்று இருந்த போது, நான் இருக்கேன் என்பது போல் ரவீந்திர ஜடேஜா வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என மொத்தம் அந்த ஓவரில் 22 ஓட்டங்கல் குவித்தார்.
#CSKvsKKR #KKRvCSK #csk #kkr #dhoni #msd all over ? pic.twitter.com/5PscfmlUEa
— Meyya (@meyya22) September 26, 2021
இதனால் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனில் நரை ரவீந்திர ஜடேஜாவை எல்.பி.டபில்யூ ஆக்க, ஆட்டம் மீண்டும் பரப்பானது.
கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவை என்ற போது, தீபக் சஹார் அசால்ட்டாக ஒரு ஓட்டம் அடித்து வெற்றியை தேடித் தந்தார்.