லேசான கோவிட் தொற்று உள்ளவர்களுக்கு சி.டி ஸ்கேன் தேவையில்லை! எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!
லேசான கோவிட் -19 தொற்று உள்ளவர்கள் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை என எய்ம்ஸ் தலைவர் எச்சரித்துள்ளார்.
லேசான கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சி.டி ஸ்கேன் பக்கவிளைவுகளைக் கொண்டிருப்பதாகவும், அது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.
"ஒரு சி.டி ஸ்கேன் 300 முதல் 400 மார்பு எக்ஸ்-கதிர்களுக்கு சமம். தரவுகளின்படி, இளைய வயதினரிடையே மீண்டும் மீண்டும் சி.டி. ஸ்கேன் செய்வது பிற்கால வாழ்க்கையில் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆக்ஸிஜன் செறிவு இயல்பானதாக இருந்தால் லேசான COVID-19 உள்ளவர்கள் CT ஸ்கேன் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை "என்று குலேரியா கூறினார்.
லேசான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து தேவையில்லை என்பது மருத்துவ மேலாண்மை வழிகாட்டுதல்கள் தெளிவாக உள்ளன என்று அவர் கூறினார்.
வரையறுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஒருவர் ஐவர்மெக்டின் அல்லது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுக்கலாம், ஆனால் அதிகமான மருந்துகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அதேபோல் லேசான தொற்று கொண்டாரவர்கள் அதிக அளவு ஸ்டெராய்டுகளை உட்கொள்வது கடுமையான வைரஸ் நிமோனியாவுக்கு வழிவகுக்கும் என் எச்சரித்தார்.