லண்டன் இரயில் நிலையத்தில் 12 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நபர்! புகைப்படத்துடன் முக்கிய தகவல்
லண்டன் இரயில் நிலையத்தில் 12 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது ப்ளாக்வெல் ஸ்டேஷனில் கடந்த மே மாதம் 28ஆம் திகதி மாலை 4.05 மணியளவில் நடந்துள்ளது.
அப்போது 12 வயது சிறுமி இரயிலை விட்டு இறங்கி படியில் சென்று கொண்டிருந்த போது ஆண் ஒருவர் அவரை அணுகினான்.
பின்னர் சிறுமி மீது கை வைத்து பாலியல் தாக்குதல் நடத்த்திவிட்டு அவன் படிக்கட்டில் இறங்கி சென்றுவிட்டான்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த நபரிடம் தகவல் இருக்கும் என கருதும் பொலிசார் அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்.