பிரான்ஸில் பிரபல நாட்டு தூதரகம் மீது குண்டு வீசி தாக்குதல்! தீப்பற்றி எரிந்த கட்டிடம்: வெளியான புகைப்படம்
பிரான்ஸ் உள்ள கியூபா தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் பாரிஸில் உள்ள கியூபா தூதரகம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தூதரக வளாகத்தில் தீப்பற்றி எரியும் புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதை கியூபா தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மர்ம நபர்கள் கியூபா தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், தூதரக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, எனினும், தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Denunciamos el ataque terrorista con cocteles molotov contra nuestra Embajada en París.
— Cancillería de Cuba (@CubaMINREX) July 27, 2021
Los responsables directos de estos actos son quienes incitan a la violencia y al odio contra nuestro país.#NoAlTerrorismo pic.twitter.com/G7vQ5Tpflb
பாரிஸில் உள்ள தங்கள் தூதரகம் மீது பெட்ரோல் குண்டு மூலம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை கியூபா வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது.