பளபளப்பான சருமத்தை பெற வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க
பொதுவாகவே அனைவருக்கும் தனது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஓர் ஆசை இருக்கும். அதற்காக பலரும் பல விதமான பொருட்களை கடைகளில் வாங்கி பயன்படுத்துவார்கள்.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களைச் செய்யும். இது எந்த பக்கவிளைவுகளையும் உங்கள் சருமத்திற்கு ஏற்படுத்தாது.
ஆகவே இயற்கையான முறையில் எப்படி முகத்தை அழுகுப் பெற செய்யலாம் என பார்க்கலாம்.
சருமப் பராமரிப்புக்கு வெள்ளரிக்காய் சாறு
- வெள்ளரி சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து கொள்ளவும். இதை முகத்தில் 15-20 நிமிடங்கள் தடவி பின் கழுவ வேண்டும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் வெள்ளரிக்காயின் இனிமையான பண்புகள் உங்கள் சருமத்தை பளபளக்கும்.
- வெள்ளரி சாற்றுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து கலக்கவும். இதை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். காய்ந்தவுடன் கழுவ வேண்டும்.
- வெள்ளரிக்காய் சாற்றை ரோஸ் வாட்டருடன் கலந்து மாஸ்க் தயார் செய்யவும். உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க நாள் முழுவதும் அதை உங்கள் முகத்தில் பயன்படுத்துக்கொண்டே இருக்கவும்.
- வெள்ளரிக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கி, மூடிய கண்களுக்கு மேல் வைத்து, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். வெள்ளரிக்காயின் குளிர்ச்சி விளைவு வீக்கத்தைக் குறைத்து, உங்கள் கண்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.
- வெள்ளரி சாறு இரைப்பை மற்றும் குடல் புண்கள், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றையும் குணப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |