சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி
CUMTA to launch app for autos and taxis in chennai: சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்ய அரசு தரப்பில் செயலி வெளியிடப்பட உள்ளது.
ஆட்டோ டாக்ஸிக்கு அரசு செயலி
சென்னையில் ஆட்டோ, டாக்சி போன்றவற்றை முன்பதிவு செய்து பயணிக்க Rapido, uber போன்ற தனியார் நிறுவனங்களின் செயலிகள் உள்ளன.
அதில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் நிறுவனங்கள் அதிக கமிஷன் தொகை வசூலிப்பதாகவும், தங்களுக்கு போதிய வருமானம் இல்லை எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதே போல் பயணிகளும் சில ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய வீட்டு வசதித் துறை அமைச்சர் ராஜ்குமார், சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பால் (CUMTA) உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.
இதில், பயணிகள் ஆட்டோவை முன்பதிவு செய்யவும், ஓட்டுநர்கள் முன்பதிவுகளை ஏற்கவும் வழிவகுக்கும்.
இதில் பயணத்தின் போது டிஜிட்டல் மீட்டர் இயக்கப்பட்டு, அதில் தூரம், நேரம் அதற்கான கட்டணம் காண்பிக்கப்படும்.
இதில், ஓட்டுநர்களுக்கு நேரடியாக ரொக்கமாகவோ/UPI மூலமாகவோ அல்லது செயலியில் உள்ள UPI தளங்கள் மூலமாகவோ பணம் செலுத்தலாம்.
மேலும், செயலி மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவோ பயணிகள் புகார்களை பதிவு செய்யலாம்.
எரிபொருள் விலைக்கு ஏற்ப, அரசால் அவ்வப்போது கட்டணங்களை புதுப்பிக்க முடியும்.
கட்டணங்களை உயர்த்த கோரிக்கை
போக்குவரத்துறை மானிய கோரிக்கையில் ஆட்டோ கட்டண உயர்வை அரசு அறிவிக்க வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக தவெக ஆட்சி அமைந்த பிறகு அரசு மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் இடையே 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதில், முதல் 1.5 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60ம், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30ம் கோரியுள்ளனர்.
மேலும், நிமிடத்திற்கு ரூ.1 காத்திருப்புக் கட்டணமும், சாதாரண கட்டணத்தைப்போல் ஒன்றரை மடங்கு இரவு நேரக் கட்டணமும் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |