தயிருடன் பச்சை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தா? வெளியான தகவல்
தயிருடன் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி கலவையைத்தான் தயிர் பச்சடி என்று சொல்வார்கள். இந்த பச்சடியை சாதம், பிரியாணி, ரொட்டி என்று பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த தயிர் பச்சடி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்தை துரிதப்படுத்தும். எடையைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இந்த பச்சடியில் வெள்ளரிக்காய், கேரட், பீட்ரூட் கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், வெங்காயத்துடன் மற்ற காய்கறிகளை சேர்க்கும்போது வெங்காயம் காய்கறிகளின் நன்மைகளை அழித்துவிடும்.
தயிர் பச்சடியில் வெங்காயத்தை சேர்ப்பது ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விரிவாக பார்ப்போம் -
1. தயிர் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. வெங்காயம் உடலுக்கு சூடு கொடுக்கும்.
2. இவை இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டால் உடலுக்கு வாதம், பித்தம் மற்றும் கபம் உருவாகிவிடும்.
3. வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும்.
4. தயிருடன், வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணம், அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் பிற வயிற்றுப் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
5. தயிர் மற்றும் பச்சை வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் உடலில் அதிகப்படியான வெப்பத்தை கொடுத்துவிடும்.
6. மேலும், உடலில் நச்சுத்தன்மையை அதிகரித்துவிடும். தோல் ஒவ்வாமை, அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்திவிடும்.
7. தயிர் மற்றும் பச்சை வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவதால் குமட்டல், வாந்தி, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்.
8. எப்போதும், வெங்காயத்தை வதக்கிய பிறகு சாப்பிடலாம். வெங்காயத்தை சூடுபடுத்தினாலோ அல்லது பொரித்தாலோ அதன் சத்து அழியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |