ராணியார் அணிந்த கிரீடம்... ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து: வெளிவரும் பகீர் பின்னணி

Queen Elizabeth II King Charles III
By Arbin Sep 15, 2022 10:45 AM GMT
Report

பாரசீக மொழியில் ஒளியின் மலை என வர்ணிக்கப்படும் கோஹினூர் வைரமானது சபிக்கப்பட்ட ஒன்று

மன்னர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டது, அவர் சொந்த மகனால் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரித்தானிய அரச குடும்பத்து ஆண்கள் அனைவரும் தவிர்க்க விரும்பும் கிரீடம் ஒன்று இனி மன்னர் சார்லஸுக்கு சொந்தம் என தெரிய வருகிறது.

அரச குடும்பத்து ஆண்களுக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் சபிக்கப்பட்ட கிரீடம் என்றே சிலர் அதை குறிப்பிடுகின்றனர். எலிசபெத் ராணியாரிடம் இருந்த பல கிரீடங்களில் ஒன்று, கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம்.

பாரசீக மொழியில் ஒளியின் மலை என வர்ணிக்கப்படும் கோஹினூர் வைரமானது சபிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறப்படுகிறது. இந்து துறவி ஒருவரின் கூற்றுப்படி, ஆண் வாரீசு எவரும் அந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்தால் அவர் உலகத்தை சொந்தமாக்கிக் கொள்வார், ஆனால் அதனால் ஏற்படும் அனைத்து துரதிர்ஷ்டங்களையும் அனுபவிக்கவும் நேரிடும் என குறிப்பிட்டுள்ளர்.

ராணியார் அணிந்த கிரீடம்... ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து: வெளிவரும் பகீர் பின்னணி | Cursed Crown King Charles To Inherit

@getty

1628ல் கோஹினூர் வைரமானது முகலாய மன்னர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டது, பின்னர் அவர் தனது சொந்த மகனால் சிறையில் அடைக்கப்பட்டார். 1739ல், ஈரானிய ஆட்சியாளர் நாதர் ஷா முகலாயர்கள் மீது படையெடுத்தார். ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் அத்துடன் கோஹினூர் வைரமானது கொள்ளையிடப்பட்டது.

நாதர் ஷா பின்னர் தமக்கு நெருக்கமான அதிகாரிகளாலையே படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், 18ம் நூற்றாண்டில் கோஹினூர் வைரமானது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் சிக்கியது. அவர்கள் அதனை விக்டோரியா ராணியாருக்கு பரிசளித்தனர்.

ஆனால் அதன் வடிவத்தில் ஏமாற்றமடைந்த ராணியார், அதனை இரண்டாக வெட்டி மீண்டும் வடிவமைக்க வைத்தார். இதனால் கோஹினூர் வைரத்தின் அளவில் மாறுதல் ஏற்பட்டது.

ராணியார் அணிந்த கிரீடம்... ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து: வெளிவரும் பகீர் பின்னணி | Cursed Crown King Charles To Inherit

@getty

1902ல் பிரித்தானிய ராணியார் அலெக்ஸாண்ட்ரா கிரீடத்தில் குறித்த கோஹினூர் வைரமானது முதன்முறையாக பதிக்கப்பட்டது. மட்டுமின்றி விக்டோரியா ராணியாருக்கு பின்னர் மூன்று பெண்கள் குறித்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிந்துள்ளனர்.

மேலும், விக்டோரியா ராணியாருக்கு பின்னர் குறித்த கிரீடமானது, அரச குடும்பத்து உறுப்பினர்கள் அணியும் கிரீடங்களின் பட்டியலிலும் இல்லை. இதனால், குறித்த கிரீடமானது மன்னர் சார்லஸ் அணிந்துகொள்ள வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது.

ராணியார் அணிந்த கிரீடம்... ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து: வெளிவரும் பகீர் பின்னணி | Cursed Crown King Charles To Inherit

கடைசியாக அந்த கிரீடத்தை அணிந்தவர் முதலாம் எலிசபெத் ராணியார் எனவும், அதுவும் 1953ல் ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் பட்டமளிப்பு விழாவின்போது என்றே கூறப்படுகிறது.

தற்போது அந்த கிரீடமானது மன்னர் சார்லஸின் மனைவி கமிலா அணிய வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. கடைசியாக அந்த கிரீடம் 2002ல் ராணியார் முதலாம் எலிசபெத்தின் சவப்பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US