வெளிநாட்டில் இருந்து வந்த பார்சல்! திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அலறிய அதிகாரிகள்
சென்னை விமான நிலையத்திற்கு வந்த பார்சலை பிரித்து பார்த்த போது கொடிய வகை சிலந்தி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நேற்று அதிகாலை அமெரிக்காவில் இருந்து சரக்கு விமானம் வந்தது. இதையடுத்து வந்த பார்சலை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் முகவரிக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதனுள் உயிருடன் 10 சிலந்தி பூச்சிகள் இருந்துள்ளது.
இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் ஆப்ரிக்கா நாட்டு கொடிய வகை சிலந்தி பூச்சிகள் என்று தெரிவித்துள்ளனர். இந்த பார்சல் போலந்து நாட்டில் இருந்து வந்துள்ளது.
இதேபோல் அமெரிக்கா நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளன என தெரியவந்தது. அவற்றில் அமெரிக்காவில் இருந்து வந்த 3 தபால் பார்சல்களை திறந்து பார்த்தபோது அதில் பதப்படுத்தப்பட்ட கஞ்சா 274 கிராம் இருப்பதை கண்டு பிடித்தனர்.
பின்னர் நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த பார்சலில் 92 கிராம் எடை அளவில் போதை மாத்திரைகள் இருந்துள்ளன. இவை அனைத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு போதை கடத்தல் சட்டப்படி சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.