சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் - எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன?

Chennai TN Weather Thanjavur trichy Cyclone Fengal
By Kirthiga Nov 30, 2024 06:13 AM GMT
Report

பெங்கால் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை அதிகரித்து வருவதோடு, பெங்கால் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனவும் இந்திய ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. 

புயல் எப்போது கரையை கடக்கும்?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று 21 செ.மீ வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டள்ளது.  

மேலும் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக உருவெடுத்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  

மேலும் இதனால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் - எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன? | Cyclone Fengal When Landfall What Rainfall

குறித்த புயலானது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதியின் ஊடாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 வரை இடி மின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைக்கும் கல்லூரிக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் - எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன? | Cyclone Fengal When Landfall What Rainfall

மேலும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் மற்றும் பரீட்சைகள் இந்நேரத்தில் நிகழ்த்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிற மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப்போக்குவரத்து சேவை இன்று பிற்பகல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவை தவிர வேறு பணிகளுக்காக வீட்டில் இருந்து வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜே.சி.பி இயந்திரங்களும் 806 படகுகளும் மோட்டார் பம்புகளும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் - எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன? | Cyclone Fengal When Landfall What Rainfall

மேலும் நாளை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிப்புரியும் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை பூங்காக்கள் மற்றும் கடற்கரைப்பகுதிகள் கனமழையால் மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US