அரபிக்கடலில் உருவாகிறது புதிய புயல்! வானிலை ஆய்வு மையம் தகவல்
2021 ஆம் ஆண்டின் முதல் புயல் அரபிக்கடலில் அடுத்த சில நாட்களில் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிழக்கு-மத்திய அரேபிய கடல் வரவிருக்கும் நாட்களில் புயல் உருவாவக வாய்ப்புள்ளது.
அது புயலாக உருவானால், அது தான் 2021 ஆம் ஆண்டின் முதல் புயலாக இருக்கும், மேலும் இது மியான்மரால் வழங்கப்பட்ட ‘Tauktae’ என்று பெயரிடப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 14ம் திகதி தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இது மே 15 க்குள் லட்சத்தீவு பகுதியை ஒட்டிய தென்கிழக்கு அரேபிய கடல் வழியாக வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, அது தனது பாதையை தொடரலாம் அல்லது அதன் பாதையை மாற்றி குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தைத் தாக்கக்கூடும்.
மே 16 க்குள் இந்தியாவின் மேற்கு கடற்கரையை ஓட்டியுள்ள மாநிலங்கள் புயலின் தாக்கத்தை காணக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Tauktae புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரையை ஓட்டியுள்ள லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
லட்சத்தீவின் தாழ்வான பகுதிகள் மே 15-16க்குள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.