நெருக்கடியிலிருந்து விடுபட மறுமணம்! அவர்களுக்காக காத்திருக்கிறேன்: இசையமைப்பாளர் டி.இமான் நெகிழ்ச்சி
தானும் தன் குடும்பமும் சந்தித்து வந்த நெருக்கடிகளில் இருந்து விடுபடவும், மகிழ்ச்சியாக வாழவும் மறுமணம் தீர்வாக இருந்துள்ளதாக பிரபல இசையமைப்பாளர் டி.இமான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டி.இமான் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து மூலம் பிரிந்தார். இந்த தம்பதியருக்கு வெரோனிகா, பிளஸ்ஸிகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அமலி என்பவரை டி.இமான் கடந்த 15ஆம் திகதி மறுமணம் செய்துள்ளார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்ககள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
தனது மறுமணம் குறித்து பேஸ்புக் பதிவில் நெகிழ்ச்சி பதிவை டி.இமான் வெளியிட்டுள்ளார். அதில் தனக்கும், விளம்பர வடிவமைப்பாளரான மறைந்த உபால்ட்-சந்திரா தம்பதியரின் மகளான அமலிக்கும் திருமணம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மறுமணம் குறித்து அவரது பதிவில், 'வாழ்வின் கடினமான நேரங்களில் எனக்கு உறுதியான ஆதரவை அளித்து வரும் எனது தந்தைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த எனது தாயின் ஆசி எனக்கு எப்போதும் இருக்கும்.
மிகச்சிறந்தவரான அமலியை மறுமணம் செய்துகொள்ள காரணமாக இருந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும் எனது குடும்பமும் சந்தித்து வந்த நெருக்கடிகளில் இருந்து விடுபடவும், மகிழ்ச்சியாக வாழவும் இந்த மறுமணம் மிகப்பெரிய தீர்வாக இருந்துள்ளது. அமலியின் மகள் நேத்ரா இனி எனது 3வது மகள். அவரின் தந்தை என்ற உணர்வு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும், எனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளஸ்ஸிகா இருவரையும் பிரிந்திருப்பது வருத்தம் அளிக்கிறது, அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் வரும்போது நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும்.
எனது இசை ரசிகர்களுக்கும், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.