பிரித்தானியாவில் கால்வாயில் விழுந்த ஊனமுற்ற மகளை உயிரைக் கொடுத்து கைப்பற்றிய 86 வயது தந்தை!
பிரித்தானியாவில் தனது ஊனமுற்ற மகளின் உயிரைக் காப்பாற்ற முயன்று 86 வயது தந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் Cornwall பகுதியில் கடந்த புதன்கிழமை குறித்த சம்பவம் நடத்துள்ளது.
லாரன்ஸ் கேசி எனும் 86 வயது நபருக்கு, 20 வயதில் ஜெஸ்ஸிகா எனும் மகள் உள்ளார். அவருக்கு பிறவியிலேயே கால்கள் இயங்காமல் செயலிழந்தன. கடந்த 20 ஆண்டுகளாக தனது மகளை வீல் சேரில் வைத்து பத்திரமாக பார்த்து வந்துள்ளார்.
ஜெஸ்ஸிகா தற்போது 'மொபிலிட்டி ஸ்கூட்டர்' எனும் ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்ட வீல் சேரை தானாகவே பயன்படுத்திவருகிறார்.
இந்த நிலையில், ஜெஸ்ஸிகா கடந்த புதன்கிழமை தனது தந்தை மற்றும் குடுப்பத்தாருடன், பியூட் கால்வாய் (Bude Canal) வழியாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஜெஸ்ஸிகா தனது மொபிலிட்டி ஸ்கூட்டரின் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் விழுந்தார். தண்ணீரில் விழுந்த தனது மகளைக் காப்பாற்ற, லாரன்ஸ் கேசி தனது வயதை பொருட்படுத்தாமல், உடனடியாக கால்வாயில் குதித்தார்.
அப்பகுதியில் வந்த வழிப்போக்கர்கள் இதனைப் பார்த்து தந்தைக்கும் மக்களுக்கு உதவி செய்தனர். அப்போது அவர்கள் ஜெஸ்ஸிகாவை காப்பாற்றிவிட்டனர்.
ஆனால், லாரன்ஸ் கேசி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்துக்கு அவசர உதவிகள் வந்து முயற்சித்த போதிலும், லாரன்ஸ் கேசியை காப்பாற்ற முடியவில்லை.
86 வயதில் உயிரைக் கொடுத்து தனது மகளை கைப்பற்றிய அவரை அப்பகுதி மக்கள் ஹீரோ என அழைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.