20 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்... பிள்ளைகள் கண் முன் மனைவியை கொன்ற பின்னணி
பிள்ளைகள் கண் முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச் சென்ற ஒருவர் நேற்று பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
2001ஆம் ஆண்டு, தெற்கு லண்டனிலுள்ள தனது வீட்டில் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார் நான்கு குழந்தைகளின் தாயான Naziat Khan (38).
Naziatஐ தங்கள் பிள்ளைகள் கண் முன்னே துடிக்கத் துடிக்க கொலை செய்துவிட்டு, அவரது கணவரான Zafar Iqbal (61) பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டார். அவரை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த பாகிஸ்தானிடம் முறையீடு செய்யப்பட்டது.
மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், நேற்று, அதாவது கொலை நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு Iqbal பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அவர் பிரித்தானியாவில் கால் வைத்ததும் பொலிசார் அவரைக் கைது செய்து மேற்கு லண்டனிலுள்ள காவல் நிலையம் ஒன்றிற்கு கொண்டு சென்றார்கள். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அவர் காணொளி மூலம் நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.
தங்கள் மகளை இழந்து தவிக்கும் Naziatஇன் குடும்பத்துக்கு, Iqbalஇன் கைது குறித்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காலம் கடந்தாலும் தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கிடைத்ததே என்ற நிம்மதி மட்டுமாவது அந்த குடும்பத்துக்கு கிடைத்துள்ளது.