மகளின் இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரத்திலே பரிதாபமாக உயிரிழந்த தந்தை !
பிரித்தானியாவில் தனது மகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அவரது தந்தை சில மணி நேரத்திலே வலிப்பு நோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் இறந்த மகள்
22 வயதான கேட்டி டேவன்போர்ட் என்ற பெண்மணி சவுத் போர்ட்டில் உள்ள ஹே அமிகோஸ் இரவு விடுதியில் வேலை செய்து வந்துள்ளார்.
தனது சக ஊழியரோடு ஏற்பட்ட தகராறில் இரவு விடுதி தீ பிடித்துள்ளது. அதிலிருந்து அவர் தப்பிக்க முயலும் போது எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
@Liverpool Echo
இதில் அவரது தலையில் அடிபட்டதால் மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி 13 நாட்களுக்குப் பின்பு உயிரிழந்தார்.
வலிப்பு நோயால் உயிரிழப்பு
கேட்டியின் இறுதிச் சடங்குகள் அவர் இறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு அக்டோபர் 14 ஆம் தேதி வெஸ்ட் லங்காஷயர் கல்லறை மற்றும் தகனத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கேட்டியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களில் கேட்டியின் அப்பாவிற்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
@Liverpool Echo
"கேட்டியின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியது, கேட்டியை இழந்தது மட்டுமல்ல, நாங்கள் அவளுடைய அப்பாவையும் இழந்தோம். சில வாரங்களுக்குப் பிறகு, அவரது இறுதிச் சடங்கின் இரவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சோகமாக இறந்தார்.” என கேட்டியின் நண்பர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.