கண்ணிமைக்கும் நொடியில்... அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட தந்தையும் 2 வயது மகளும்: பகீர் காணொளி
பிரித்தானியாவின் பிராட்போர்டில் சாலையை கடக்க காத்திருந்த ஒரு தந்தையும் அவரது 2 வயது மகளும் விபத்தில் சிக்கி அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளியான காணொளி ஒன்றில், தந்தை ஒருவர் தனது இரண்டு வயது மகளை தன் கைகளில் ஏந்தியபடி பிராட்போர்டில் உள்ள Killinghall சாலையை கடக்க காத்திருந்துள்ளார்.
அப்போது, கண்ணிமைக்கும் நொடியில் கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த தந்தை சாலையினூடே சுமார் 30 அடி தூரம் வரைக்கும் இழுத்து செல்லப்பட்டார் என்றே தெரிய வந்துள்ளது.
அந்த மோட்டார் சைக்கிள் சாரதி தவறான பதையில் விரைந்து, இந்த விபத்தில் சிக்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 2 வயதேயான குழந்தை சிராய்ப்புகள் மற்றும் லேசான காயங்களுடன் தாப்பியுள்ளார்.
ஆனால் 32 வயதான அந்த தந்தைக்கு கால்கள் மற்றும் முகத்தில் பலத்த காயமேற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. உடனடியாக இருவரும் அவசர மருத்துவ உதவிக்குழுவினரால் மீட்கப்பட்டு, அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு அந்த மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவயிடத்தில் இருந்து மாயமானதாகவே கூறப்படுகிறது. ஆனால் சாலை போக்குவரத்து பொலிசார் வெளியிட்ட தகவலில்,
குறித்த விபத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த மோட்டார் சைக்கிள் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.