பிரித்தானியாவில் ஒரே வீட்டில் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம்: பிள்ளைகளை இழந்து கதறும் தந்தை
இங்கிலாந்திலுள்ள வீடு ஒன்றில் நான்கு பேர்கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த குழந்தைகளின் தந்தை கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி காண்போர் மனதை கலங்கவைப்பதாக அமைந்துள்ளது.
Derbyshireஇலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, Terri Harris (35) என்ற பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவர், அந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் தோழி என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு ஆண் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நான்கு மணி நேரப் பயணத்துக்குப்பின் வீடு திரும்பிய அந்த குழந்தைகள் இருவரின் தந்தையான Jason Bennett கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி காண்போர் மனதை கலங்கடிக்கச் செய்வதாக அமைந்துள்ளது.
அவர் சமூக ஊடகங்களில் தன் பிள்ளைகளை நினைத்து வெளியிட்ட மனதை உருக்கும் செய்திகளிலிருந்து, உயிரிழந்த குழந்தைகளின் பெயர் John (13) மற்றும் Lacy (11) என தெரியவந்துள்ளது.
என் இதயம் சுக்குநூறாக உடைந்து போனது என்று கூறியுள்ள Jason, என் பிள்ளைகளை இந்த ராட்சதர்களிடமிஉர்ந்து காப்பாற்றத் தவறிவிட்டேனே, இப்போது அவர்கள் என்னிடமிருந்து திடீரென பறிக்கப்பட்டுவிட்டார்களே என கதறியுள்ளார்.