பிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட ஆண் ஒருவர்: வெளியான முதல் புகைப்படம்
பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் குடியிருப்பு ஒன்றில் மூன்று பிள்ளைகளுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தற்போது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்று பிள்ளைகளும்
சர்ரே பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட நபரின் பெயர் Piotr Swiderski என தெரிய வந்துள்ளது. அவருடன் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளும் அவரின் மகன்கள் எனவும், மூவரும் 4 வயதுக்கு உட்பட்டவர்கல் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இது தனிப்பட்ட சம்பவம் என குறிப்பிட்டுள்ள பொலிசார், மூன்றாவது நபர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Spelthorne பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரிந்தனர். இதில் மூன்று சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இருவர் இரட்டையர்கள் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, சம்பவம் நடந்த குடியிருப்புக்கு அருகே வசிக்கும் ஷெர் சிகந்தாரி தெரிவிக்கையில், பொலிசார் அங்கே வந்துசேரும் முன்னர் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நடந்த சம்பவம் நம்ப முடியாமலும், அதிரிச்சியை ஏற்படுத்துவதுமாக உள்ளது என அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அலறல் சத்தம்
48 வயதான சிகந்தாரி தெரிவிக்கையில், அந்த தந்தையுடன் அறிமுகம் இல்லை என்றாலும், பிள்ளைகள் மூவரும் அவர்களின் தாயாரும் அருமையானவர்கள் என்றும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டவர்கல் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் நால்வரும் அடிக்கடி பூங்கா அல்லது தெருவோரத்தில் நடக்க செல்வதை தாம் பார்த்துள்ளதாகவும் சிகந்தாரி குறிப்பிட்டுள்ளார். பொதுவாக பிள்ளைகளின் சத்தம் மட்டுமே அந்த வீட்டில் இருந்து கேட்டு வந்ததாகவும் ஆனால் சம்பவத்தன்று மதியம் சுமார் 12 மணிக்கு அலறல் சத்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் பொலிசார் வந்து சேர்ந்ததாகவும் சிகந்தாரி குறிப்பிட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகள் உட்பட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இறப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |