24 மணி நேரம் மட்டுமே உள்ளது! ஒயிட் வாஷை தவிர்க்க கே.எல்.ராகுலை எச்சரித்த ஸ்டைன்
இந்திய அணி ஒயிட் வாஷை தவிர்க்க வேண்டும் என்று கேப்டன் கே.எல்.ராகுலை, தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஸ்டைன் எச்சரித்துள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த 19-ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து நேற்று பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் இந்த தொடர் குறித்து பேசினார். அப்போது அடுத்த போட்டி துவங்க 24 மணி நேரம் உள்ளது.
கே.எல்.ராகுல் தன்னுடைய முதல் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டார். சிறிய விஷயங்கள் மாறியதால், போட்டியின் முடிவு மாறிவிட்டது.
அவர் அதை சரி செய்து கொண்டு இரண்டாவது போட்டியில், நல்ல ஒரு திட்டத்துடன் களமிறங்க வேண்டும். அப்படி அவர் அதை சரி செய்யவில்லை என்றால் 3-0 என்ற ஒயிட்வாஷ் நிலையை இந்தியா எட்டலாம் என்று எச்சரித்துள்ளார்.