இந்த உணவை சமைத்தபின் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது! உயிருக்கே உலை வைக்குமாம்
Food
Digestive problems
Diarrhea
Reheating
By Kishanthini
பொதுவாக நம்மில் பலர் உணவு ருசியான உணவுகளை நிறைய சமைத்து விட்டு அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கம்.
உண்மையில் அப்படி செய்வதால் உணவில் உள்ள சத்துக்களை அழித்து உணவு விஷம் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களை உண்டாக்கும்.
குறிப்பாக என்னென்ன வகை உணவுகள் எந்தெந்த மாதிரியான விளைவுகளை உண்டாக்குகின்றன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- பால் முழுக்க முழுக்க புரதமும் கால்சியமும் நிறைந்தது. இதனை அளவுக்கு அதிகமாக வெப்பப்படுத்தும்போது, அதனால் நிறைய அமிலத்தன்மை அதில் ஏற்படுகின்றன. இந்த அமிலத் தன்மை உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும்.
- சிக்கனில் புரதச் சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இதை முதல் முறை சமைப்பதற்கும் இரண்டாவது முறை சூடு செய்யும்போது, இதிலுள்ள புரத விகிதங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தும்.
- கீரைகள் மற்றும் இலை வடிவ காய்கறிகளில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. ஒருமுறை சமைத்த பின்பு மீண்டும் சூடுபடுத்தும்போது அதில் உள்ள நைட்ரேட் ஊட்டச்சத்துக்கள் உடைந்து போய், நச்சுத் தன்மை கொண்டதாக மாறும்.
- அரிசி சாதத்தை சமைத்து கொஞ்சம் நேரத்திலேயே சாப்பிடுவது தான் நல்லது. அதை குளிர்வித்து, மீண்டும் சூடுசெய்யும்போது அதந்த பாக்டீரியாக்களில் உள்ள நுண் கிருமிகள் உற்பத்தி பெருகி, அழிந்து அதற்குள்ளேயே தங்கியிருக்கும். இது வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் நச்சுகளை உருவாக்கிவிடும்.
- காளானில் மீண்டும் சூடாக்கும்போது அதிலுள்ள புரதக் கலவைகளில் மாறுாடுகள் உண்டாகும், இந்த புரத அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்போது அது உடலின் செரிமான அமைப்பு மற்றும் இதயத்திற்கு ஆபத்தை தரும்.
- நூல்கோலில் அதிக அளவு நைட்ரேட்டுகள் நிறைந்திருக்கின்றன. அதனால் இதை இரண்டாவது முறையாக மீண்டும் சூடுபடுத்தினால், அது நச்சுத் தன்மையுடையதாக மாறிவிடும். எனவே, டர்னிப் மற்றும் பீட்ரூட் போன்ற கிழங்கு வகைகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடக் கூடாது.
- வேகவைத்த அல்லது வறுத்த முட்டைகள் எதுவாக இருந்தாலும்மீண்டும் சூடாக்குவதால் நச்சுத்தன்மையுடையதாக மாறும், இது செரிமானப் பாதையில் பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
- வேகவைத்த உருளைக்கிழங்கையோ அல்லது சமைத்த கிழங்கை சமைத்த உணவை அறை வெப்பநிலையில் அதிக நேரம் வைத்திருந்து மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. அது அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்தை இழந்துவிடும்.
- சமையல் எண்ணெயை அதிகமாக சூடு செய்யக் கூடாது. அப்படி சூடாக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தான டிரான்ஸ் கொழுப்புகளாக மாறும். ஏனெனில் அதை மீண்டும் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவது வாந்தி, உயர் கொலஸ்டிரால், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US