இந்த இடங்களில் எல்லாம் செல்பி எடுக்காதீர்கள்! மீறினால் உயிரே போய்விடும் உஷார்
சமீப காலத்தில் செல்பி மோகம் இளைஞர்களிடம் அதிக அளவில் இடம் பிடித்து உள்ள நிலையில் அதனால் ஏற்படும் விபரீதங்களும் அதிகரித்துள்ளது.
எங்கு பார்த்தாலும் செல்பி எதற்கெடுத்தாலும் செல்பி, அவ்வாறு எடுக்கும் செல்பி போட்டோக்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்ஸ் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் இன்றைய இளைய சமூதாயத்தினர்.
சரி, எங்கெல்லாம் செல்பி எடுத்தால் உயிர் பலி ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்
விலங்குகளுடன் செல்பி எடுப்பது
உதாரணம்: பாம்பு மலைப்பாம்பு கிராமங்களில் எதாவது பிடிபட்டால் அதனை தன் கழுத்தில் சுற்றிக்கொள்வது.
கடற்கரை
அலைகள் அதிகமாக இருக்கும் இடங்களில், நண்பர்களுடன் அப்படியே சாய்ந்தவாறு செல்பி எடுத்து, தவறி விழுவது.
வாட்டர்ஃபால்ஸ்
ஆறுகளின் அருகில் நின்று செல்பி எடுக்கும் போது தவறி விழுதல்.
ரயில்பாதைகள்
ரயில்பாதையில் நின்றபடி, ரயில் வருவதை கூட கவனிக்காமல் நின்றுக்கொண்டு செல்பி எடுத்து, அப்படியே அடிபட்டு உயிர் விடுவது.
இப்படி பல ஆபத்தான இடங்களில் நின்றுக்கொண்டு செல்பி எடுப்பதில் என்னதான் ஆர்வமோ..? இதனை இளைஞர்கள் கொஞ்சமாவது புரிந்துக்கொண்டு ரிஸ்க் எடுக்காமல் செல்பி எடுத்துக் கொள்வதே நல்லது.