ஓட்டு வீட்டில் வசித்த குடும்பம்! ஓடுகளின் இடையே சிறுவன் கண்ட காட்சி.. பதறியடித்து ஓடிய சம்பவம்
தமிழகத்தில் வீட்டு ஓடுகளுக்கு இடையே கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையை சேர்ந்த சுரேஷ் என்பவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த தெக்கலுார் அருகே வடுகபாளையத்தில் பண்ணைத்தோட்டம் வைத்துள்ளார்.
பண்ணையை பராமரிக்க குணசேகரன், அவரது மனைவி பாரதி, 12 வயது மகன் தாரகன் ஆகியோர், அங்குள்ள ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று மதியம், 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று குணசேகரன் வீட்டிற்குள் புகுந்தது, பின்னர் வீட்டு ஓடுகளுக்கு இடையே பதுங்கிக்கொண்டது.
இதனை யதேச்சையாக பார்த்த தாரகன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் குடும்பத்தார் பதறியடுத்து கொண்டு வெளியே வந்தனர். இது குறித்து அவிநாசி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தரப்பட்டது.
பின்னர் அங்கு விரைந்த தீயணைப்பு ஒரு மணி நேரம் போராடி, பாம்பை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட பாம்பை அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.
இச்சம்பவத்தில் நல்லவேளையாக பாம்பால் பாதிக்கப்படாமல் அந்த குடும்பம் தப்பியுள்ளது.