ஆபத்தாக முடியலாம்... ஆசிய நாடொன்றை பயணத் தடை பட்டியலில் இணைத்த பிரித்தானியா
பிரித்தானிய குடிமக்கள் பயணிக்க மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஆசிய நாடான பாகிஸ்தானையும் இணைத்துள்ளது FCDO அலுவலகம்.
மிகவும் ஆபத்தான நாடுகள்
சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில், பிரித்தானிய குடிமக்கள் பயணப்பட்ட மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலை புதுப்பித்துள்ளதுடன், 8 புதிய நாடுகளையும் அந்த பட்டியலில் FCDO இணைத்துள்ளது.
மட்டுமின்றி, FCDO தடை செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கை தற்போது 24 என அதிகரித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், அதிக குற்றச்செயல்கள், போர், பயங்கரவாதம், நோய், காலநிலை சூழல் மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட காரணிகளை பயணத்தடைக்கு காரணமாக FCDO குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், FCDO புதிதாக இணைத்துள்ள நாடுகளில், ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான், சூடான், லெபனான், பெலாரஸ் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், தடுப்புப்பட்டியலில் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், ஹைட்டி, ஈராக், இஸ்ரேல், லெபனான், லிபியா, மாலி, நைஜர், வட கொரியா, சோமாலியா, சோமாலிலாந்து, தெற்கு சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
பயணப்பட வேண்டாம்
மிக மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு பயணப்பட வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு பிரித்தானியர்கள் எந்த காரணம் கொண்டும் பயணப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 2023ல் மட்டும் பாகிஸ்தானில் வன்முறை தொடர்பில் 1,524 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
789 பயங்கரவாத தாக்குதல்களில் 1,463 பேர்கள் காயமடைந்துள்ளனர். மட்டுமின்றி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத உச்சம் இதுவெனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |