ரோகித் சர்மாவோ விராட் கோஹ்லியோ கிடையாது! இவர் தான் மதிப்பு மிக்க வீரராக இருக்க போறார்... பிரபல வீரர் ஆருடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் மதிப்பு மிக்க வீரராக இருக்கப் போவது யார் என்பது குறித்து டேனிஷ் கனேரியா மனம் திறந்துள்ளார்.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதாலும், இனிமேல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்குமா என்ற சந்தேகத்தினாலும் இத்தொடர் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு.
இந்த போட்டியில் மதிப்பு மிக்க முக்கிய வீரர்களாக கோஹ்லி அல்லது ரோகித் சர்மா இருப்பார்கள் என பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் மதிப்புமிக்க வீரராக இருப்பார்.
நீங்கள் எந்த வடிவத்தில் விளையாடினாலும், பந்து வீச்சாளர்கள் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
பவுலர்கள் அதிகம் விக்கெட் எடுத்தால், அந்த அணி போட்டியில் வெற்றிப் பெறும். ரவீந்திர ஜடேஜாவைப் பற்றி பேசினால், அவர் ஒரு முப்பரிமாண வீரர். அவரைப் போன்ற ஒரு வீரரை நீங்கள் வெளியே வைத்திருக்க முடியாது, அவர் நிச்சயம் அணியில் விளையாட வேண்டும் என கூறியுள்ளார்.