கனரா வங்கியிலிருந்து 58 கிலோகிராம் தங்க நகைகள் கொள்ளை: குற்றவாளியை கண்டறிய மந்திர சடங்குகள்!
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் பசவன பாகேவாடியில் உள்ள கனரா வங்கி கிளையில் துணிகரமான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
58 கிலோ கிராம் தங்க நகைகள் கொள்ளை
இந்த திருட்டு சம்பவத்தில் வங்கியில் வைக்கப்பட்டிருந்த 58 கிலோகிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொள்ளைச் சம்பவம் சட்ட அமலாக்கத் துறைக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எட்டு சிறப்புப் படைகளை அமைத்து அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் படி, மே 23 ஆம் திகதி மாலை வங்கி ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியைப் பூட்டிச் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து மே 24 மற்றும் 25 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது.
மே 26 ஆம் திகதி, வங்கியைச் சுத்தம் செய்ய வந்த பியூன், ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். இதையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்து பெருமளவு தங்க நகைகளைத் திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளியை கண்டறிய மந்திர சடங்குகள்
பொதுமக்கள் வங்கிக் கடனுக்காக அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதால், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், குற்றவாளிகளை கண்டறிய மந்திர சடங்குகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து காவல்துறை, "குற்றவாளிகளை கைது செய்யத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். விரைவில் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |