அம்மாவுக்கு ஒரு துணையைக் கண்டுபிடித்தேன்! தனது தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்
இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த ஆர்த்தி ரியா என்ற பெண் தனது தாயாருக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார்.
வைரலான புகைப்படம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஆர்த்தி ரியா சக்கரவர்த்தி. இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
அதாவது, ஆர்த்தி தனது தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்த விடயம் தான் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.
அம்மாவுக்காக துணையை தேடிய மகள்
இதுதொடர்பாக ஆர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், 'அப்பா இறந்த பிறகு, அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடிபெயர்ந்தேன், நான் அங்கு வளர்ந்தேன். எனக்கு 2 வயது இருக்கும்போது அம்மாவுக்கு 25 வயது. நீ மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எல்லோரும் அம்மாவிடம் சொல்வார்கள்.
ஆனால், எனது தயார் மறுத்துவிட்டார். நான் திருமணம் செய்து கொண்டால் எனக்கு அன்பு கிடைக்கும், ஆனால் என் மகளுக்கு ஒரு தந்தை கிடைக்க மாட்டார் என்று கூறுவார்.
தற்போது அம்மாவுக்கு நான் ஒரு துணையைக் கண்டுபிடித்தேன். நானும் ஒரு அப்பாவைக் கண்டறிந்தேன் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். அது என்னை மிகவும் மகிழ்ச்சியாக்குகிறது' என தெரிவித்துள்ளார்.