தோல்வியடைந்த முதல் திருமணம்! காதலில் விழுந்த தாய்க்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மகள்
20 வயது மகள் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அசாமில் வசிப்பவர் நிர்மலி. இவரின் முதல் திருமணம் வெற்றிகரமாக அமையவில்லை. 20 வயதில் தனது மகளோடு புகுந்த வீட்டை விட்டு நிர்மலி வெளியேறினார்.
அதன் பிறகு, ஒரு வேலை செய்து கொண்டே, மீண்டும் படிக்க ஆரம்பித்தார். நிர்மலிக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில்தான் அவர் ஒருவரை சந்தித்தார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, திருமணம் வரை சென்றது.
bbc.
இந்த முடிவுக்கு, தனது 20 வயதான மகளிடம் நிர்மலி சம்மதம் கேட்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து தாயார் நிர்மலிக்கு அவர் மகளே முன்னின்று திருமணம் செய்து வைத்தார்.