பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகள்!! வெளிச்சத்துக்கு வந்த திடுக்கிட வைக்கும் சம்பவம்
இங்கிலாந்தின் Longsight நகரில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு மறைத்து வைத்த மகளுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
58 வயதான Beverley என்பவரையே அவரது மகளான Cassandra Scott(வயது 36) கடந்தாண்டு கொலை செய்துள்ளார்.
தன்னுடைய காதலனை விட்டு பிரிந்து வந்த Cassandra Scott, கடந்தாண்டு மார்ச் மாதம் தாயுடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கியுள்ளார்.
15 நாட்களிலேயே இருவருக்கும் வாக்குவாதம் எழ, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற Cassandra Scott, தாயின் முதுகில் கத்தியால் 10 முறைக்கும் மேல் குத்திக் கொன்றுள்ளார்.
இந்த கொலையை மறைப்பதற்காக தாயின் சடலத்தை துணிகளால் சுற்றி Cupboardல் பத்திரமாக அடைத்து வைத்துள்ளார்.
அனைத்து தடயங்களையும் அழித்ததுடன் வீட்டுக்கு புதிதாக பெயிண்ட் அடித்துள்ளார், மேலும் தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளையும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தினரையும், தனது சகோதரிகளையும் நம்ப வைப்பதற்காக, போலியான தற்கொலை கடிதம் ஒன்றினையும் தயார் செய்ததுடன், மருத்துவமனையில் தன்னுடைய தாய் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
எனினும் இதை நம்பாத மக்கள், அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் Cassandra Scottன் வீட்டை சோதனையிட்ட போதே, அவரது தாய் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து Cassandra Scottயை கைது செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், தன்னுடைய தாயை மிகவும் நேசிப்பதாகவும், கோபத்தில் அந்நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கொலை செய்து விட்டதாகவும் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த Manchester Crown நீதிமன்ற நீதிபதிகள், Cassandra Scottக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.