அந்த தொழிலில் ஈடுபடும் மகள்... கசிந்த தகவலால் மனமுடைந்த பெண் நீதிபதி எடுத்த விபரீத முடிவு
சொந்த மகளின் பின்னணி அறிந்து, அவரை பாதுகாக்க முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நெறிமுறை விசாரணையை எதிர்கொண்ட பின்னர் கட்டாய ராஜினாமா செய்த பெண் நீதிபதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகள் தொடர்பில் தெரியவந்த பகீர் பின்னணி
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் 53 வயதான Melanie Andress-Tobiasson. இவரே, மகள் தொடர்பில் தெரியவந்த பகீர் பின்னணியை அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டவர்.
இவரது மகள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்ததாகவும், அவரை பாதுகாக்க தமது பதவியை துஸ்பிரயோகம் செய்வதாகவும் நீதிபதி Melanie Andress-Tobiasson மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனால் அவர் நெறிமுறை விசாரணையை எதிர்கொள்ள நேர்ந்ததுடன் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டார். சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை ஜனவரி 20ம் திகதி தமது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் நீதிபதி Melanie Andress-Tobiasson.
விபச்சார வளையத்தில் இருந்து காப்பாற்ற
அவர் எவ்வாறு இறந்தார் அல்லது அவரது சடலம் எங்கேயிருந்து மீட்கப்பட்டது உள்ளிட்ட தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. தனது மகள் சாராவை விபச்சார வளையத்தில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பதாக ஆண்ட்ரெஸ்-டோபியாசன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது.
மேலும், சாரா பணியாற்றி வந்த ஆயத்த ஆடை கடையின் பின்னணியில் குற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என நீதிபதி ஆண்ட்ரெஸ்-டோபியாசன் நம்பியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தொடர்புடைய கடையை பொலிசார் சோதனையிட வேண்டுமென ஆண்ட்ரெஸ்-டோபியாசன் கட்டாயப்படுத்தியதன் பின்னர் நெவாடாவின் நீதித்துறை ஒழுங்கு ஆணையம் முன்னாள் சட்டத்தரணியான இவரை இரண்டு ஆண்டுகள் விசாரணைக்கு உட்படுத்தியது.
மட்டுமின்றி, தொடர்புடைய ஆயத்த ஆடை கடையானது தமது மகளை வேலைக்கு சேர்த்துக்கொண்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்தும் வேகாஸ் மெட்ரோ காவல் துறை கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
நீதித்துறை விதிகளை மீறியதாக நடவடிக்கை
அந்த ஆயத்த ஆடை கடையின் உரிமையாளர் ஒரு கொலையாளி எனவும் அவர் திட்டமிட்டே நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்தவர்களின் இளம்வயது மகள்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும் ஆண்ட்ரெஸ்-டோபியாசன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து தாம் சேகரித்த தரவுகளை அவர் எஃப்.பி.ஐயிடம் ஒப்படைத்த நிலையில், நீதித்துறை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மட்டுமின்றி, காவல்துறை விசாரணையை அவர் சிதைக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்படும், ஆனால் நீதிபதி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு வேறுவழியின்றி ஆண்ட்ரெஸ்-டோபியாசன் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.