SRH என்னை தக்க வைக்காது! அணியிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்திய வார்னர்
அவுஸ்திரேலிய அதிரடி மன்னன் டேவிட் வார்னர், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் மற்றும் புதிய 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள், தாங்கள் தக்க வைக்க இருக்கும் 4 வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐ-யிடம் சமர்பிக்க இன்றே கடைசி நாள்.
8 அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் விவரங்களை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஐதராபாத் அணியிலிருந்து தான் விலகுவதை ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார்.
2021 ஐபிஎல் தொடரின் போது ஐதராபத் பிளேயிங் லெவனில் இருந்து வார்னர் ஓரங்கட்டப்பட்டது சரச்சையை கிளப்பியது, எனினும், டி20 உலகக் கோப்பையில் பட்டையை கிளப்பிய வார்னர், ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், ஐதராபாத் அணி உங்களை தக்க வைத்தால், அந்த அணிக்காக விளையாடுவீங்களா என இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் வார்னரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வார்னர், அவர்கள் என்னை தக்க வைக்கமாட்டார்கள், அதனால் அதுகுறித்து என்னால் ஏதுவும் செய்ய முடியாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் வார்னர் பங்கேற்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.