கங்கையை தொடர்ந்து யமுனை ஆற்றிலும் கொரோனா சடலங்களா? பகீர் கிளப்பும் வீடியோ
கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், யமுனை ஆற்றிலும் பாதி எரிந்த நிலையில் சடலங்கள் கிடந்தது மேலும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
ஹிமிர்புர் என்ற பகுதியில் ஓடக்கூடிய யமுனை நதியில் பாதி எரிந்த நிலையில் சில உடல்கள் ஆற்றில் மிதந்து வந்ததாக கூறும் உள்ளூர் மக்கள், இதனால் தங்கள் கிராம மக்கள் பெரும் பீதியடைந்து உள்ளதாக கூறுகின்றனர்.
இதற்கிடையே பீகார் மாநிலம் கதிஹாரில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள், சுகாதார ஊழியர்களால் ஆறுகளில் கொட்டும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர், இதுகுறித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ள ராகுல் காந்தி,
ஆறுகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் அடித்து வரப்படுகின்றன. சிகிச்சைக்காக மக்கள் மைல் கணக்கில் காத்திருக்கின்றனர். பிரதமர் மோடியே, உங்களது கண்ணாடியை கழட்டுங்கள்; உங்களுக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடத் திட்டத்தை தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை என சாடியுள்ளார்.