கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் இறந்து கிடந்த பாம்பு.., பக்தர்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது.
இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் பிரசாத கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூவைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் மதனிகா இந்த கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பிரசாத விற்பனை கடையில் ரூ. 60 கொடுத்து இரு புளியோதரை வாங்கினர்.
பார்சலை பிரித்த போது, ஒரு டப்பாவில் இருந்த புளியோதரைக்குள், இறந்த நிலையில் குட்டி பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இததொடர்பாக கடைக்கு சென்று கேட்ட போது ஊழியர் அலட்சியாக பதிலளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்தை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, அழிக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |