நாம் தமிழர் ஆட்சியில் ஆணவக்கொலையோ.. பாலியல் வன்கொடுமை கொலையோ நடந்தால் இது தான் கதி! கொந்தளித்த சீமான்
நாம் தமிழர் ஆட்சியில் ஆணவக்கொலையோ, பாலியல் வன்கொடுமை கொலையோ நடந்தால் குற்றவாளிகளுக்கு என்ன நேரும் என்பதை சீமான் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று 26-09-2021, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்ட தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திலீபன் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி, குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.
இதன்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் ஆணவக்கொலை குறித்து கூறியதாவது, சாதி ஓட்டு பொய்விடும் என்ற பயத்தில் தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் முருகேசன் - கண்ணகி ஆணவக்கொலை வழக்கு தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிடவில்லை.
சாதி பார்ப்பவர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டும் என நான் ஏற்கனவே கூறிவிட்டேன். நான் சாதிக்க வந்தவன் சாதிக்கு வந்தவன் இல்லை.
எனக்கு குடி பெருமை கிடையாது, எனக்கு மொழி பெருமை இனப் பெருமை தான். குடிக்காக கொலை செய்வதை என்னால் ஏற்க முடியாது.
முருகேசன் - கண்ணகி வழக்கில் ஜயா உத்தமராச வழங்கிய தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.
தற்போது நேரலையில்..
— சீமான் (@SeemanOfficial) September 26, 2021
தியாகத்தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி 26-09-2021 https://t.co/kZOrTSM01V
ஆனால் எங்கள் ஆட்சிகாலங்களில் குடி பெருமை கொலையோ, பாலியல் வன்கொடுமை கொலையோ நடக்காது, நடக்க முடியாது, நடந்தால் அவர் உயிரோடு இருக்க முடியாது. குடியில் பெருமை இல்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என சீமான் கூறினார்.