பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதி: வழக்கில் முக்கிய திருப்பம்

By Balamanuvelan Apr 04, 2025 05:28 AM GMT
Report

பிரான்சில் வாழ்ந்துவந்த பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதி

பிரித்தானியர்களான ஆண்ட்ரூ (Andrew Searle, 62) மற்றும் டான் (Dawn Searle, 56) தம்பதியர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் தெற்கு பிரான்சிலுள்ள Les Pesquiès என்னுமிடத்தில் அமைந்துள்ள தங்கள் இரண்டாவது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் 6ஆம் திகதியன்று, தம்பதியர் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கிடப்பது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  

பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதி: வழக்கில் முக்கிய திருப்பம் | Deaths Of British Couple In France Murder Suicide

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில், கொள்ளையர்கள் யாரோ அவர்களை கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால், பின்னர் பொலிசாரின் சந்தேகம் ஆண்ட்ரூ மீதே திரும்பியது. 

அதாவது, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏதோ பிரச்சினை காரணமாக சண்டை ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஆண்ட்ரூ டானைக் கொலை செய்திருக்கலாம் என்றும், தப்புவதற்காக, கொள்ளையர்கள் அவரை கொலை செய்ததுபோல காட்ட முயன்றிருக்கலாம் என்றும் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.

கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து டானைத் தாக்கியிருந்தால் அவர் சத்தமிட்டிருப்பார். அது அவரது வீட்டுக்கு அருகிலுள்ள மற்ற வீடுகளுக்கு நிச்சயம் கேட்டிருக்கும். 

அதுவும், அவரது உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. ஆக, தோட்டத்தில் ஏதாவது நடந்திருந்தால் நிச்சயம் மற்ற வீடுகளுக்கு சத்தம் கேட்டிருக்கும்.

பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதி: வழக்கில் முக்கிய திருப்பம் | Deaths Of British Couple In France Murder Suicide

ஆகவே, அவர் தோட்டத்தில் கொல்லப்படவில்லை, வீட்டுக்குள் வைத்து கொல்லப்பட்டு, அவரது உடல் தோட்டத்தில் கொண்டு போடப்பட்டுள்ளது.

பொருட்கள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும்போது, ஆண்ட்ரூ கொள்ளை நடந்தது போல காட்டுவதற்காக பொருட்களை ஆங்காங்கு வீசியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுகிறார்கள். 

எல்லாவற்றிற்கும் மேல், கணவன் மனைவிக்கிடையிலான சண்டையில் டான் கொல்லப்பட, அதை மறைக்க கொள்ளை முயற்சி நடந்ததுபோல காட்ட ஆண்ட்ரூ முயன்றிருக்கலாம் என்றும், பின்னர் மனம் மாறி, தானே தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுவதாக தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது ஆண்ட்ரூ தன் மனைவியான டானை கொலை செய்துவிட்டு, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுள்ளார் என்னும் ரீதியில் வழக்கு விசாரணை தொடர்கிறது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US