குறைந்து வரும் கொரோனா தடுப்பூசிகளின் திறன்... என்ன செய்வது? நிபுணர்கள் ஆலோசனை
Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து, கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாக்கும் திறன் பெருமளவில் குறையத் தொடங்கியுள்ளதாக ஒன்ராறியோ மாகாண அறிவியல் ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பெறுவது, கொரோனா தொற்றியவர்களை தீவிரமான கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பது உண்மைதான் என்றாலும், கொரோனா தொற்றைத் தடுக்கும் திறன் குறைந்துகொண்டே வருகிறது என்கிறார் ஒன்ராறியோ மாகாண அறிவியல் ஆலோசனைக்குழுவின் இயக்குநரான Dr. Peter Jüni.
ஒரு மாதத்திற்கு முன் சுமார் 90 சதவிகிதம் பாதுகாப்பை அளித்த இரண்டு டோஸ் தடுப்பூசிகள், தற்போது 14.9 சதவிகித பாதுகாப்பையே அளிப்பதாக சமீபத்தில் வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசியின் பாதுகாப்புத்திறன் சூரியனைக் கண்ட பனி போல் உருகி வருகிறது என்று கூறியுள்ள Jüni, Omicron வைரஸ், நோயெதிர்ப்பு மண்டலத்துக்குள்ளேயே ஊடுருவி வருகிறது என்கிறார்.
அது, இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர், தடுப்பூசியே பெறாதவர் என்றெல்லாம் பார்க்காமல் சகட்டுமேனிக்கு தொற்றி வருகிறது என்றார்.
இத்ற்கிடையில், பிரித்தானியாவிலிருந்து கிடைத்துள்ள தரவுகள், மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்றும் அபாயத்தை ஐந்து மடங்கு குறைக்கலாம் என காட்டியுள்ளதாக தெரிவிக்கும் Jüni, மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்குவதை வேகப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், தடுப்பூசிகளின் திறன் குறைந்துகொண்டே வந்தாலும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், தீவிர சிகிச்சைப்பிரிவை சென்றடைவதற்கும் எதிராக, 90 சதவிகிதத்திற்கு அதிகமாக, தொடர்ந்து பாதுகாத்து வருகிறது என்பதையும் சமீபத்திய தரவுகள் தெரிவித்துள்ளன.
ஆக, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், தீவிர சிகிச்சைப்பிரிவை சென்றடைவதற்கும் எதிராக பாதுகாத்து வரும் நிலையில், மூன்றாவது டோஸ் தடுப்பூசி, கொரோனா தொற்றும் அபாயத்தை குறைப்பது தெரியவந்துள்ளதால், மூன்றாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு அறிவியலாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022