டோனி பக்கத்தில் இருந்து இதை பார்த்திருக்கிறேன்! இலங்கை போட்டியில் ஹீரோவான தீபக் சஹார் உருக்கம்
இலங்கை அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சஹார் அந்த போட்டி குறித்து பேசியுள்ளார்,
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி தேடித் தந்த தீபக் சஹாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து அவர் கூறுகையில், நான் பேட்டிங் விளையாட மைதானத்திற்குள் வந்த போது, என மனதில் இந்த போட்டியை எப்படியாவது ஜெயித்து கொடுக்க வேண்டும் என்ற எண்னம் தான் ஓடியது.
அதிலும், டிராவிட் சார், நான் இந்திய ஏ அணிக்காக விளையாடியதை பார்த்துள்ளதால், அவர் என் மீது வைத்த நம்பிக்கையே ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
மேலும், டோனியின் ஆட்டத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு என கிடைத்துள்ளது. தோனியிடம் இருந்து அதிகமான பேட்டிங் நுனுக்கங்களை கற்றுள்ளேன்.
எனது தந்தை நான் பேட்ஸ்மேனாக வேண்டும் என்றே விரும்பினார், பேட்டிங்கில் எனது தந்தை தான் எனது பயிற்சியாளர். என்னை பொறுத்தவரையில் நான் ஆல் ரவுண்டர் தான், மற்றவர்கள் சொல்வதை பற்றி எனக்கு கவலை இல்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.