பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்
Britain's defence firms are warned of Russian spy threat: பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களின் தலைவர்கள், ரஷ்ய உளவாளிகளின் இலக்காக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்காக ட்ரோன்
கோடையின் தொடக்கத்தில் மூத்த அரசு அதிகாரிகளுக்கும் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற வட்டமேசை சந்திப்பின்போது, ரஷ்யாவிடமிருந்து தாங்களும் தங்கள் ஊழியர்களும் எதிர்கொள்ளும் அதிகரித்த அச்சுறுத்தல்கள் குறித்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட எந்தெந்த நிறுவனத் தலைவர்கள் அங்கு இருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை; இருப்பினும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்களே அவர்கள் என்று கருதப்படுகிறது.
பல ஆயுத நிறுவனங்கள் தங்களின் ஆயுத விற்பனையின் காரணமாக ஏற்கனவே முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேற்கு சஃபோக்கில் உள்ள RAF மில்டன்ஹாலுக்கு அருகில் அமைந்துள்ள, உக்ரைனுக்காக ட்ரோன்களைத் தயாரிக்கும் உக்ர்ஸ்பெக் சிஸ்டம்ஸ் நிறுவனமும்,
ரஷ்யாவின் உட்பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்க சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களை வழங்கிய BAE சிஸ்டம்ஸின் துணை நிறுவனமான காலன்-லென்ஸும் அவற்றில் அடங்கும்.
மட்டுமின்றி, ரஷ்யாவைத் தாக்க உக்ரைன் பயன்படுத்தும் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணைகளைத் தயாரிக்கும் MBDA நிறுவனமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதனிடையே, இரண்டு ஜேர்மானிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களைக் கொல்ல ரஷ்யா தீட்டிய சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'ஃபாரின், காமன்வெல்த் அண்ட் டெவலப்மென்ட் ஆபீஸ்' (Foreign, Commonwealth & Development Office) கூட்டம் நடைபெற்றது.
அவர்களில் ஒருவர், உக்ரேனியப் படைகளுக்கு பீரங்கி குண்டுகளை வழங்குவதற்கான 4.2 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தத்தைக் கொண்டிருந்த பாதுகாப்புத் துறை நிறுவனமான 'ரைன்மெட்டல்' (Rheinmetall)-இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்மின் பாப்பர்கர் ஆவார்.
இந்த நிலையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் தலைவர்கள், தங்கள் சொந்தப் பாதுகாப்பு மற்றும் தங்கள் நிறுவனங்களின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றே தகவல் கசிந்துள்ளது.
மேலும், பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் தற்போது ரஷ்யர்களின் முறையான இலக்காகக் கருதப்படுகிறார்கள் என்பதை ரஷ்யா உணர்த்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |