பிரித்தானியாவில் ‘ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும்’ என பிரதமர் போரிஸ் கூறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு!
பிரித்தானியாவில் 3வது பொதுமுடக்கம் விதிப்பதை விட ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாக The Daily Mail செய்தி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த அக்டோபர் மாதம் டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடந்த கூட்டத்தில், பிரித்தானியாவில் 3வது பொதுமுடக்கம் விதிப்பதை விட ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாக The Daily Mail செய்தி வெளியிட்டது.
எனினும், பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கு The Daily Mail எந்தொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.
இந்நிலையில் இந்த குற்றம்சாட்டு உண்மையில்லை என விளக்கமளித்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் Ben Wallace, பிரதமர் அவ்வாறு கூறவில்லை, அனைவரும் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர் என கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் போரிஸ் ஜான்சன் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முற்றிலும் தீவிரமானவர் என்று Ben Wallace கூறினார்.
This is an outright lie. Not one named source or substantiated fact.
— Nadine Dorries 🇬🇧 #StayAlert (@NadineDorries) April 26, 2021
Days before Hartlepool by election and a wide set of local/PCC/Mayoral elections.
It’s mendacious, vexatious co ordinated gossip given in order to negatively influence the outcome
https://t.co/t6VfMbexSe