ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு டெல்லி தக்க வைக்கும் 4 வீரர்கள் இவர்கள் தான்! வெளியான உறுதியான தகவல்
ஐபிஎல்லில் டெல்லி அணி தக்க வைத்துக் கொள்ளவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும், உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ஏனெனில், அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் சேரவுள்ளதால், அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இருப்பினும், பழைய அணிகள் தங்கள் அணியில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் நாளை(27.11.2021) என்பதால் 8 ஐபிஎல் அணிகளும், தாங்கள் தக்க வைத்துக் கொள்ள வீரர்களின் பட்டியலை தெரிவிக்க வேண்டும்.
அதன் படி டெல்லி அணி தக்க வைக்கவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆனால் இது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், பிரபல ஆங்கில ஊடகமான ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில், டெல்லி அணி ரிஷப் பாண்ட், அக்சர் பட்டேல், ப்ரித்வ் ஷா மற்றும் அன்ரிச் நோர்ட்டிஜியாவை தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம் அணியின் மற்ற முக்கிய வீரர்களான கசிக ரபாடா, அஸ்வின் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் போன்றோர் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.